ஆண்டவர் இயேசுவின் எருசலேம் பணயம் கி. பி 28 ம் ஆண்டு செப்டெம்பர் முதல் கி. பி 29 மார்ச் வரைக்கு இடையிலான காலப்பகுதியில் நடந்திருக்கலாம் என எண்ணப்படுகிறார். ஆண்டவர் இயேசு தனது பயணத்தில் கலிலேயா சமாரியா போன்ற பாதைகளின் ஊடாக சென்றிருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில் ஓர் பணியாளன் அடைய வேண்டிய துன்பத்தைப் பற்றி தமது சீடர்களுக்கு எடுத்துக் கூறினார். இறையரசில் ஆண்டவர் இயேசு அனுபவித்த துன்பங்களை சீடர்களும் அடைய வேண்டும் என்பதை அவர்களுக்கு எடுத்துக் காட்டி துன்பத்தின் ஊடாக வரும் மாட்சியை வெளிப்படுத்தினார்.
பணியில் பொதுவாக உலகத்தார் நினைக்கும் நினைவிற்கு எதிரான இன்னுமோர் மாதிரியை முன்வைக்கின்றார். மற்றவர்களை ஆழ வேண்டும் என்ற நினைவிற்குப் பதிலாக மற்றவர்களால் ஆழப்படவேண்டும் என்ற சிந்தனையை வளர்ப்பதும் மற்றவர்கள் எமக்கு உதவ வேண்டும் என எண்ணுவதை விட மற்றவர்களுக்கு உதவுவதும் ஒரு சில மக்களுக்கு தலைவராய் இருப்பதை விட அவர்களுக்கு பணியாளராய் இருப்பதுமே பணியின் தாழ்மை எனக் கூறுகின்றார்.
இயேசுவின் சீடர்களுக்குள்ளே யார் பெரியவர் என்ற சிந்தனை எழுந்த போது ஆண்டவர் இயேசு அவர்களை நோக்கி எதைக் கறித்து உரையாடினீர்கள் எனக் கேள்வி எழுப்புகின்றார். இதன் ஒளியில் நாங்கள் எதைக்குறித்துப் பேசுகின்றோம் என்பதை இறைவன் உற்று நோக்குகின்றார். அதாவது தாழ்மையான சிந்தனைகள் எண்ணங்கள் பேசப்படுகின்றதா? இல்லையேல் பெருமையானவைகளை நாம் பேசுகின்றோமா? என்பதை நாம் எண்ணிப் பார்க்க அழைக்கப்படுகின்றோம். மேலும் நல்ல நோக்கங்களைக் குறித்து சிந்திப்பது தவறானது அல்ல. மாறாக அதை அடைவதற்கு எத்தகைய வழிகளை பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியமானதாகும்.
ஆண்டவர் இயேசு சிறுபிள்ளையை உதாரணமாக நிறுத்தி சீடர்களுக்குப் போதிக்கின்றார். இதன்படி சிறுபிள்ளையில் இயேசுவின் குண இயல்புகளைக் காணவும் இறை அரசை அவர்களில் கண்டு கொள்ளவும் முயற்சிக்க வேண்டுமாயின் அவர்களுக்கு தாழ்மை மிக அவசியமாகும் என இயேசு போதிக்கின்றார்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக