இயேசுவின் உருமாற்றம்

இயேசுவின் உருமாற்றம் (மாற்கு 9 : 2 – 9)

இயேசுவின் மறுரூபத்தைக் குறித்து ஒத்தமைவு நற்செய்திகளும் 4ம் நற்செய்தியும் கூறுகின்றன. இவ் உருமாற்றம் ஆண்டவர் இயேசு தனது பணியில் துன்பப்படுவதற்காக எருசலேமை நோக்கிச் செல்வதற்காகத் தன்னைத் தயார்படுத்திய இடமாகும். இத்துயரத்தை ஏற்கும் பணியில் மோசே, எலியா போன்றவர்களின் உற்சாகமூட்டும் பணியும் கடவுளின் வார்த்தைகளும் வலுச்சேர்ப்பவைகளாக காணப்பகின்றன. இங்கு கடவுளின் தரிசனம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது ( எசேக்கியேல் 13 : 21, 24 : 15 ).

இயேசுவின் உருமாறுதல் நிகழ்வின் போது சீடர்கள் இயேசுவின் பணியைக் குறித்து தெளிவடைவதை நாம் காண்கின்றோம். குறிப்பாக ஆண்டவர் இயேசு தமது துன்ப அனுபவங்களைப் பற்றி சீடர்களோடு அடிக்கடி பேசியுள்ளார் ( மாற்கு 8 : 30, 31, 9 : 30, 31, 10 : 30, 31 ). இவ் உரையாடல்களின் மத்தியில் பேதுரு இயேசுவை நோக்கி ஆண்டவரே உமக்கு இத்தகைய துன்பங்கள் ஏற்படக்கூடாது என ஆலோசனை கூறிய போதிலும் இயேசு அவற்றை நிராகரித்ததன் முக்கியத்துவத்தை சீடர்கள் இப்போது உணர்ந்திருக்கக் கூடும். எனினும் பேதுரு இயேசுவை நோக்கி உமக்கு ஒரு கூடாரமும் மோசேக்கு ஒரு கூடாரமும் எலியாவிற்கு ஒரு கூடாரமும் அடித்து மலையிலேயே தங்குமாறு ஆலோசனை கூறுகிறார். இவ் ஆலோசனை வெற்றியான நற்செய்திப் பரம்பலுக்கு உதவுவதாக அமைகின்றதே ஒளிய உண்மையான நற்செய்தியாக அமைவதில்லை.

மாற்றமடையும் நிகழ்வில் கடவுளின் பிரசன்னம் இருந்ததை சீடர்கள் கண்டார்கள் ( வி. பயணம் 34 : 30 ). இயேசு உருமாற்றம் அடைந்ததை சீடர்கள் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். இதன் ஒளியில் ஒரு தனிமனிதனின் அல்லது சமூகத்தின் மனமாற்றம் அல்லது உருமாற்றம் அவர்களின் செயல்களின் ஊடாக வெளிப்பட வேண்டும் ( தி. பணிகள் 2 : 32 ) இல் இயேசுவின் மரணத்திற்கும் உயிர்ப்பிற்கும் சாட்சி கூறுவதாக பேதுரு முன் வருவதைப் போல எமது வாழ்விற்கும் பணிக்கும் மக்கள் சாட்சி கூற அழைக்கப்படுகின்றனர். மேலும் ஆதித்திருச்சபையில் பிளீனி என்பவர் திராயனுக்கு எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்களின் அறவாழ்வைப் பற்றி சான்று பகர்கின்றார்.

பரபரப்பான தரிசனத்தின் மத்தியிலும் கடவுளின் குரல் சீடர்களை நோக்கி வருகின்றது. இவர் என் அன்பார்ந்த மைந்தன். இவருக்புகு செவி கொடுங்கள் என்பதாகும். இதனை 7 வது வாக்கியத்தில் நாம் காணலாம். பரபரப்பின் மத்தியிலும் அமர்ந்த மெல்லிய கடவுளின் வார்த்தையை கேட்பதற்கு சீடர்கள் ஆயத்தமாகிறார்கள். எமது திருப்பணிகளிலும் அநேக சந்தர்ப்பங்களில் பரபரப்பான வார்த்தைகளும் பதற்றமடைய வைக்கும் சத்தங்களும் எம்மைச் சூழ்ந்துள்ளன. ஆனால் இவற்றின் மத்தியில் வெளிப்படும் மெல்லிய கடவுளின் சத்தத்தை நாம் கேட்பதற்கு தயங்குகிறோம் , இல்லையேல் மறுக்கின்றோம். இறைவாக்கினராகிய எலியா பலத்த காற்றின் மத்தியிலும் பேர் இரச்சல்களின் மத்தியிலும் கடவுளைக் காண முற்பட்டார். ஆனால் கண்டு அடையவில்லை. மாறாக அமர்ந்த மெல்லிய காற்றின் மத்தியில் கடவுளைக் கண்டு அடைந்தார். பேராயர் லக்தாச டிமல் அவர்கள் பின்வருமாறு கூறுகிறார். நாங்கள் பரபரப்புடன் கடவுளுக்காக பணி செய்யும்போது கடவுளுடைய சத்தத்தையும் மனிதர்களுடைய சத்தத்தையும் கேட்க மறுக்கின்றோம் என்கிறார். இதன் ஒளியில் எமது பணிகளின் மத்தியில் கடவுளின் சத்தத்திற்கும் மனிதரின் சத்தத்திற்கும் எங்கள் செவிகளைத் திறக்குமாறு மறுரூபமலை எம்மை சவால் இடுகின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக