யோவான் நற்செய்தியில் இயேசுவின் 'நானே' என்ற பதம் முக்கியமானதாகும். இப்பதம் கடவுளையோ அல்லது அவரால் அனுப்பப்படுகின்ற மேசியாவையோ குறிப்பதற்காகப் பாவிக்கப்படுகின்றது (வி. பயணம் 3: 14). இதன் ஊடாக ஆண்டவர் இயேசு கடவுளால் அனுப்பப்பட்டவர் என்ற முடிவுக்கு வரலாம் (யோவான் 20 : 21). இதன் ஒளியில் கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு நல்லாயனாகச் செயற்படுவதற்கு எப்போதும் கடவுளில் தங்கி இருந்தார். கடவுளில் தங்கியிருக்கும் ஆயர்கள் நல்லாயர்களாக செயற்பட முடியும்.
எசேக்கியேல் 34 இல் மனித ஆயர்களான அரசர்கள் மேய்ப்பர்கள் போன்றவர்களின் வீழ்ச்சியைக் குறித்துக் கூறப்படுகின்றது. இவ் ஆயர்கள் மக்களுக்குரியவைகளை வழங்காமல் மக்களை பணி புரியுமாறு பணித்தனர். எனவே பணியை மக்களுக்கு ஆயன் வழங்கும்போது அவன் நல்லாயனாக காணப்படுவார் (திரு 23 : 4, மாற்கு 10 : 45). நல்லாயன் மக்களிடமிருந்து பொருட்களைத் திருடவோ கட்டாயத்தின் பேரில் அபகரிக்கவோ மாட்டான் (யோவான் 10 : 9, 1 சாமு 8 : 1 – 10). மாறாக மந்தைக்குத் தேவையான பரிபூரண வாழ்வைக் குறித்து எப்பொழுதும் சிந்திப்பான் (யோவான் 10 : 10).
நல்லயான் சமுதாயத்தில் அடையாளமிளந்து ஒடுக்கப்பட்டு தள்ளப்பட்டுள்ள மக்களுடன் தன்னை அடையாளப்படுத்தி அவர்களின் பெயர்களை நன்கு அறிந்து பெயர்களால் மந்தையை அழைப்பான். இங்கு பெயர்கள் என்பது ஓர் மனிதனின் அடையாளத்தைக் குறித்து நிற்கின்றது (யோவான் 10 :3). மேலும் நல்லாயன் அடையாளமிளந்த மக்களின் பொருட்டை ஆபத்தை ருசிபார்க்கும் தலைவராகக் காணப்படுவார். அதாவது ஆபத்தற்ற சூழ்நிலையை விரும்புபவராகவோ அல்லது ஆபத்தைக் கண்டு பின்வாங்குபவராகவோ நல்லாயன் காணப்படமாட்டார் யோவான் 10 : 12).
ஆயர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை அவர்கள் செயல்கள் தீர்மானிக்கும் என இயேசு கூறுகின்றார். குறிப்பாக இங்கு கள்வர் கொள்ளைக்காரர் என்போர் பண ஆசைக்கு இலக்கான யூதாசையும் தெயுதாசையும் குறித்து நிற்கின்றது. எனவே நல்லாயர்கள் தங்கள் கனிகளினால் மற்றவர்களை மகிழ்விப்பார்கள். மேலும் சமுதாயத்தில் மற்றவர்களால் தொலைக்கப்பட்ட ஆடுகளையும் கூட்டிச் சேர்க்கும் பணியை நல்லாயன் மேற்கொள்வார். இதனால் நல்லாயர்கள் திருச்சபைக்குள் இருக்கும் மந்தைகளை மாத்திரம் பராமரிப்புச் செய்யாமல் புதிய மந்தைகளை தேடிச் செல்லும் பணியிலும் ஈடுபட அழைக்கப்படுகின்றனர் (யோவான் 10 : 16). எனவே இன்றைய இலங்கைச் சூழலில் ஆயர்கள் ஒவ்வொருவரும் நல்லாயர்களாக மாற வேண்டிய தேவை வலியுறுத்தப்படுகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக