கிறிஸ்தவ சீடத்துவத்திற்கான அழைப்பு

கிறிஸ்தவ சீடத்துவத்திற்கான அழைப்பு (மாற்கு 8 : 31 – 38)

கிறிஸ்தவ வாழ்வில் பொதுவாகப் பேசப்படும் கருப்பொருள்களில் சீடடத்துவம் முக்கியமானதாகக் காணப்படுகின்றது. ஒரவர் என்னை பின்பற்ற விரும்பினால் தன்னைத் தான் வெறுத்து தன் சிலுவையை அனுதினமும் சுமந்து வருமாறு ஆண்டவர் அழைக்கின்றார். தன்னைத்தான் வெறுத்து என்பது மனிதவாழ்வின் அடையாளத்துடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. (தொட. நூல் 12 : 1 – 3, ஆதி ) கடவுள் ஆபிரகாமை அழைத்து நீ உனக்கு உண்டான எல்லாவற்றையும் விட்டு நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்கு புறப்பட்டுப் போ எனக் குறிப்பிடுகின்றார். இங்கு நாடு வீட உறவு போன்றவைகள் ஓர் மனிதனின் அடையாளத்தைக் குறிக்கின்றது. எனவே உன்னைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளும் இவ்வடையாளங்களை நீ வெறுப்பதன் ஊடாகவே இறைவனுக்கு சீடனாகலாம் என்ற உண்மை புலனாகின்றது. அதாவது உனது அடையாளங்கள் மற்றவர்களைப் பாதிக்கக் கூடியவகையில் ஒரு சீடனுக்கு அமைதல் பொருத்தமானது அல்ல. இதனையே தன்னைத்தான் வெறுத்தல் என்ற பதம் குறித்து நிற்கின்றது. சுருங்கக் கூறின் தனி அடையாளத்தில் இருந்து பொது அடையாளத்தை நோக்கி நகருதலே சீடத்துவம் ஆகும்.

சிலுவை சுமத்தல் என்ற வார்த்தைக்கும் சீடத்துவத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. நிகழ்கால நன்மைக்காகவோ எதிர்கால பணனுக்காகவோ மற்றவர்களின் வற்புறுத்தலுக்காவோ சிலுவை அனுபவத்தை தெரிந்துகொள்ளாமல் தானாகவே முன் வந்து மற்றவர்களின் நன்மைக்காக தன்னையே தியாகம் செய்யும் நிலையே சிலுவை சுமத்தல் ஆகம். உரோம அரசியல் சூழலில் ஓர் போர்ச்சேவகன் தன்னுடைய பொhதியை சுமக்குமாறு பிரயாணிகளுக்கு கட்டளை இடுவான். இவ் அனுபவத்தில் போர்ச்சேவகன் மக்கள் மீது கட்டாயத் திணிப்பை மேற்கொள்ளுவான். இக்கலாசாரத்திற்கு எதிராக அண்டவர் இயேசு மாற்றுக் கலாசாரத்தை முன்வைக்கிறார். இதன் ஒளியில் சீடத்துவம் என்பது திணிப்பு அல்ல. மாறாக அன்பின் அடித்தளத்தில் நிறைவேற்றப்படவேண்டியது ஒன்று.

அனுதினமும் பின்பற்றுதல் என்பது சீடத்துவத்தில் நிலைத்திருக்கும் தன்மையை தெளிவுபடுத்துகின்றது. விதைப்பவன் உவமையில் முட்புதர்கள், கற்பாறைகள் போன்றவற்றில் விழுந்த விதைகள் வளர்ச்சி அடைந்த போதிலும் நிரந்தரமாக பலனளிப்பதற்கு சூழல் இடமளிக்கவில்லை. ஆதித்திருச்சபையில் வரலாற்றுக் காலப்பகுதியில் கி . பி 64 – 313 ஒரு சில கிறிஸ்தவர்கள் கலாபனைகளின் நிமித்தமாக கிறிஸதுமீது கொண்ட சீடத்துவத்தை துச்சமாக மதித்தனர். இதனால் அனுதினமும் அவர்களால் கிறிஸதுவைப் பின்பற்ற முடியவில்லை. எனவே சலுகைகளுக்காக கிறிஸ்துவைப் பின்பற்றி துன்புறும் அனுபவங்களில் அவரை மறுதலிப்போரை அனுதினமும் கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் எனக் குறிப்பிடுதல் முடியாது. எனவே சீடத்துவம் என்பது தனி அடையாளத்தில் இருந்து விலகி பொது அடையாளத்தைத் தேடவும் சுயநன்மையைத் துறந்து பொது நன்மையை நோக்கி நாடவும் குறிப்பிட்ட சூழலில் இருந்து விலகி அனுதின சூழலில் கிறிஸ்துவைப் பின்பற்றவும் சீடத்துவம் எம்மை அழைக்கின்றது.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக