பணியின் மத்தியில் ஒற்றுமை

பணியின் மத்தியில் ஒற்றுமை மாற்கு 9 : 38 – 41)

இப்பகுதியில் இயேசுவின் பெயரை உபயோகித்து ஒருவர் பேய்களைத் துரத்துகின்றார் என இயேசுவின் சீடர்கள் இயேசுவிடம் முறையிட்டது மாத்திரமன்றி அம்மனிதனை கண்டிக்கும் உத்தரவை இயேசுவிடம் வேண்டிக்கொண்டார்கள். எனினும் ஆண்டவர் இயேசு அவனைக் கண்டிக்காமல் இப்பேர்ப்பட்ட சூழ்நிலையில் எவ்வாறு ஐக்கியத்தைப் பேணலாம் என வலியுறுத்துகிறார். குறிப்பாக கடவளையும் அவரது செயல்பாட்டையும் பல்வேறு வழிகளில் நாம் புரிந்து கொள்ளலாம். எனவே கடவுளுடைய வெளிப்பாட்டை ஓர் குறிக்கப்பட்ட செயற்பாட்டிற்குள் அடக்கி விடக்கூடாது. ஏனெனில் செயற்பாட்டைப் பார்க்கிலும் வெளிப்பாடு மேலானதாகும். (தி. பாடல்கள் 19 : 1).

மனிதர்கள் பொதுவாக உண்மையைத் தேடி அலைகின்றார்கள். பூரணமாக உண்மையை நாம் ஒருபோதும் கண்டடைய முடியாது. எனவே கோட்பாடுகள், செயற்பாடுகள் போன்றவற்றை விட உண்மை பரந்துபட்ட தன்மை உடையது. அதனை யாருமே கட்டுப்படுத்திவிட முடியாது. கிறிஸ்துவாகிய உண்மை அனைத்துலகிற்கும் உரியது ஒன்றாகும். (யோவான் 1 : 10). மேலும் என்னால் புரிந்துக் கொள்ளப்பட முடியாத, என்னால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இடத்தில், நபரில் முறையில் கடவுள் செயல்படும்போது அதனை நான் தவறு எனக் கூற முடியாது. மேலும் பல்வேறுபட்ட உண்மைகள் மிக்க உலகில் நாம் வாழும் போது வேறுபாடுகளின் மத்தியில் சகிப்புத்தன்மை உள்ளவர்களாக மாறும்போது மாத்திரமே பணியில்; ஒற்றுமையை பேணலாம்.

எதாவது ஒரு கொட்பாடோ அல்லது உறுதிக்கோட்பாடோ அதன் உண்மைத்தன்மை, அதனால் உருவாக்கப்படும் நபர்களாலும் அவர்கள் செயற்பாடுகளினாலும் தீர்மானிக்கப்படும். இதன் ஒளியில் நாம் பிறருடைய செயற்பாட்டை நியாயம் தீர்க்கவோ விமர்சிக்கவோ குறைத்து மதிப்பிடவோ கூடாது. மேலும் மற்றவ்hகளால் செய்யப்படும் நற்செயல்களைப் பாராட்டி அவர்களுக்கு உற்சாகமூட்டி தொடர்ந்தும் அவர்கள் நன்மைக்காக உழைக்கக்கூடிய விதத்தில் அவர்களை உருவாக்க வேண்டும். பணிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருச்சபைக்குள்ளும் பணிகள் வேறுபடுகின்றன. (எபேசியர் 4 : 1 -6). இவ்வேறுபாடுகள் மக்களிடையே அச்சுறுத்தலையோ போட்டி மனப்பான்மையையோ உருவாக்கி விடக்கூடாது. வேறுபாடுகளை நாம் வளர்க்கவும் அபிவிறுத்தி செய்யவும் அழைக்கப்படுகின்றறோம். கடவுள் தன்னுடைய நோக்கத்திற்காக கிறிஸ்தவர்களையோ பிற மதத்தவர்களையோ மதம் சாராதவர்களையோ பயன்படுத்தக்கூடும் குறிப்பாக யூதர்கள் பபிலோனியாவில் அடிமைகளாக இருந்தபோது பாரசீக இனத்தைச் சார்ந்த சைரஸ் என்பவரை விடுதலையின் கருவியாக கடவுள் உபயோகித்தார். (ஏசாயா 45 : 1) இதன் ஒளியில் தீமைகளுக்கு எதிராக மக்களை அடிமைப்படுத்தும் அடிமைத்தனத்திற்கு எதிராக கிறிஸ்துவின் பெயரை உபயோகித்து செயற்படும் மக்களை நாம் உற்சாகப்படுத்த வேண்டும். ஏனெனில் அவர்களும் கிறிஸ்துவிற்கு உரியவர்கள் நிறைவில் அனைவரும் கிறிஸ்துவுக்குள் கூட்டிணைக்கப்படுவார்கள். (எபேசியர் 1 : 10). இ;தகைய சிந்தனைகள் காணப்படும்போது பணியில் ஒற்றுமையைப் பாதுகாக்கலாம்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக