கடன் வாங்க முடியாது

கடன் வாங்க முடியாது (மத்தேயு 25:1-12)

பொதுவாக எல்லா மதங்களும் இறுதியியலை பற்றிப் பேசுகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாங்கள் இறுதி நாளில் இடம்பெறும் நியாயத்தீர்ப்பைக் குறித்தும் பரலோக வாழ்வைக் குறித்தும் அடிக்கடி பேசி வருகின்றோம். ஆண்டவர் இயேசு நிகழ்காலத்தில் நடைபெறும் இறுதியியல் சார்ந்த நீதித்தீர்ப்பைப்பற்றி 10 கன்னிகைகள் உவமையில் மத்தேயு 25:1-13 வரையுள்ள பகுதியில் கூறுகின்றார். ஆகவே இறுதியியல் சார்ந்த நிகழ்கால யாத்திரையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை குறித்து இக்கட்டுரையில் அவதானிப்போம்.

கடன் வாங்க முடியாது 

முதலாவதாக இறுதியியல் சார்ந்த நிகழ்கால யாத்திரையில் பிரயாணிக்கும் போது நாம் ஆயத்தமுள்ளவர்களாக இருத்தல் மிக அவசியமாகும். ஒரு மாணவன் தனது பரீட்சைக்காக இறுதி நேரத்தில் செயற்படுவானாகில் அவனது பெறுபேறு எவ்வாறு அமையும் என எம்மால் ஊகித்துக்கொள்ள முடியும். இதே வகையில் மணவாளனின் வருகைக்காக காத்திருந்த கன்னியர்கள் இறுதிநேரத்திலேயே தாங்கள் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு இருந்தார்கள். இதன் காரணமாக மணவாளனின் வருகையின் போது அவர்கள் கைவிடப்பட்டதை நாம் காணலாம். திருச்சபை வரலாற்றில் 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கொன்சன்ரைன்ஸ் என அழைக்கப்பட்ட அரசன் மனமாற்றத்தின் அடையாளச் சின்னமாகிய திருமுழுக்கினை தனது மரிக்கும் தருவாயிலேயே பெற இருப்பதாக அறிவித்தான். அவனது அறிவிப்பு அவனின் ஆயத்தமற்ற நிலையை எடுத்துக் காட்டுகின்றது. ஒருமுறை அன்னை திரேசாவிடத்தில் அறிஞர் ஒருவர் சென்று கடவுளின் வருகைக்காக ஏதாவது ஆயத்தங்களை செய்திருக்கின்றீரா? என வினாவினார். அப்பொழுது திரேசா ஒவ்வொறு நாளின் நிகழ்கால வாழ்விலும் நான் ஆயத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றேன் என பதிலுரைத்தார். எனவே இறுதியியல் சார்ந்த வாழ்வின் ஆயத்தம் ஒவ்வொறு நாளும் மேற்கொள்ளப்பட வேண்டியதொன்றாகும். மாறாக அது இறுதிநாளில் மேற்கொள்ளப்பட வேண்டியதல்ல.

இரண்டாவதாக இறுதியியல் சார்ந்த யாத்திரையில் மீட்புப்பற்றிய அனுபவம் ஒவ்வொறு மனிதனுக்கும் உரிய ஒன்றாகும்.மாறாக இன்னுமொருவரிடம் இருந்து கடன் பெற்றுவிட முடியாது. ஊதாரணமாக மணவாளனைச் சந்திக்க எதிர்கொண்டிருந்த 5 கன்னியர்கள் தங்களிடம் எண்ணெய் இல்லாதபோது ஏனைய 5வரிடம் கடன் வாங்குவதற்கு முயற்சித்தனர். இவ்வேளையில் தீடீரென மணவாளன் வந்த போது மணவாளளைத் தரிசிக்க முடியவில்லை. இதே வகையில் மீட்பின் அனுபவத்தில் கணவனுக்காக மனைவியோ, மனைவிக்காக கணவனையோ, பிள்ளைகளுக்காக பெற்றோரோ, பெற்றோருக்காக பிள்ளைகளோ முயற்சிக்க முடியாது. ஏனெனில் மீட்பின் ஆயத்தப்பாதையில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பொறுப்பு உண்டு என்பதை இவ் உவமை காண்பிக்கின்றது. ஊதாரணமாக இஸ்லாமிய மதத்தில் குடும்பத்தில் ஒருவர் மக்கா நோக்கி  புனித யாத்திரைக்கு செல்வாரேயாகில் முழுக்குடும்பமும் மீட்பு அடைவர் என்ற சிந்தனை காணப்படுகின்றது. ஆனால் கிறிஸ்தவ மதத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு தனிமனிதனதும் பங்களிப்பு அவசியம் என்பது இவ் உவமை வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது.


இறுதியில் சார்ந்த நடுத்தீர்ப்பை நோக்கிய யாத்திரையில் நாம் பயணிக்கும் போது ஒவ்வொரு நாளும் எம்மை நாமே ஆயத்தப்படுத்திக் கொள்ளல் மிக அவசியமானதாகும். மேலும் நாம் ஒவ்வொருவரும் எமது மீட்பின் அனுபவத்திற்கு பொறுப்புடையவர்கள் ஆகின்றோம். மாறாக இவ் அனுபவவத்தை நாம் பிறரிடம் இருந்து கடனாக பெற்றுவிட முடியாது என்பதை மனதில் இருத்திக் கொள்ளவேண்டும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக