ஆலயத்தில் அர்ப்பணித்தல்

ஆலயத்தில் அர்ப்பணித்தல் (லூக்கா 2:22-38)

ஆண்டவர் இயேசு யார்? என்ற வினா அவருடைய பிறப்பில் இருந்து இன்று வரை வரலாற்றில் எழுப்பப்படும் ஓர் பிரச்சனையாகும். ஆலயத்தில் இயேசுவை பிரதிஷ்டை பண்ணிய நிகழ்வு அவர் யார்? என்பதை ஓரளவேனும் புரிந்து கொள்வதற்கு உதிவியாகின்றது. இயேசுவிற்கு 8ம் நாளில் விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இங்கு விருத்தசேதனம் என்பது கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட உறவின் அடித்தளமாகும். (தொ.நூல் 17:1-10) இத்தகைய உறவு நிலைக்குள் ஆண்டவர் இயேசு அனுப்பப்பட்டார். இதன்மூலம் கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே  உறவுப்பாலத்தை ஏற்படுத்தும் உடன்படிக்கையின் பணியை தன்மீது இயேசு ஏற்றுக்கொண்டார். அதாவது இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையை மேற்கொள்வதே இயேசுவின் பணியாகும்.

ஆலயத்தில் அர்ப்பணித்தல்

யூத பாரம்பரியத்தில் வழிவந்து பாதுகாக்கப்பட்டச் சட்டங்களின் தொகுப்பாக ஆண்டவர் இயேசு இரண்டு புறாக்களையும் புறாக்குஞசுகளையும் பலியாக செலுத்தினார். (லூக்கா 2:24) இது பழைய ஏற்பாட்டு சட்டங்களின நிறைவாகும். (லேவி 12) இதற்கூடாக பலிப்பொருட்கள் செலுத்தப்பட்டு இயேசு மீட்கப்படும் நிலை காணப்படுகின்றது. இதன் ஊடாக ஆண்டவர் இயேசு பலியாக தன்னை வழங்கி அநேகரை மீட்டுக்கொள்வார் என்ற சிந்தனை வெளியாகின்றது. அதாவது தீர்க்கர்கள் முன்னுரைத்த துன்புறும் ஊழியனின் இறைவாக்கு நிறைவேறும் இடமாக ஆலய அர்ப்பணிப்பு காணப்படுகின்றது. (ஏசாயா 5:3)

இயேசு பிறருக்கு ஆறுதலைக் கொண்டு ஆறுதலை கொண்டு வருபவராக காண்ப்பிக்கின்றார். (ஏசாயா 40:1) இயேசுவின் காலத்தில் மேசியா மக்களுக்கு ஆறுதலை கொண்டு வருவார் என ஒவ்வொருவரும் எண்ணி இருந்தனர். இதன் ஒளியில் அவ் ஆறுதலை கொண்டு வருபவர் இயேசுவே என சிமியோன் கூறுகின்றார். இதன் ஊடாக ஆறுதலின் பணியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகின்றது. (2 கொரி 1:1-10) இன்றைய பிளவடைந்துள்ள உலகில் ஆறுதலின் பணியின் அவசியம் இங்கு மேசியாத்தன்மை பகிரங்கமாக்கப்படுகின்றது.

லூக்கா 2:32ல் ஆண்டவர் இயேசு புற இனத்தவருக்கான ஒளி என காண்ப்பிக்கப்படுகின்றார். அதாவது ஏசாயா 49:6 இன்படி இவரே எதிர்பார்க்கப்பட்ட ஒளியின் நிறைவாகும். மேலும் யோவான் 1:6-8ல் அநேகரை உண்மைக்குள் நடத்தும் ஒளி எனவும் இயேசு காண்ப்பிக்கப்படுகின்றார். இதன் ஒளியில் இயேசு மற்ற மக்களுக்கான வழிக்காட்டி என்ற உண்மை புலனாகின்றது. ஆலயத்தில் எதிர்கார்த்திருத்து காத்திருந்த சிமியோனுக்கு இது பிரகாசிக்கும் ஒளி ஆகும்.

இயேசுவின் பிறப்பு அநேகர் விழுவதற்கும் அநேகர் எழுவதற்குமான வாய்பபை அளிக்கின்றது. இதன்படி இயேசுவின் பணியில் வரப்போகின்ற நியாயம் தீர்க்கும் தன்மை வெளியாகின்றது. இதன்படி ஆண்டவரின் நடுத்தீர்க்கும் பணி எடுத்துரைக்கப்படுகின்றது. இதன்படி ஆண்டவர் இயேசு உடன்படிக்கையின் உறவாளராகவும், மீட்பாளராகவும், மேசியாகவும் அனைவரையும் உள்வாங்கும் ஒளியாகவும் மனிதர்களை நடுத்தீர்ப்பவராகவும் காட்டப்படுகின்றார்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக