திருவார்த்தையில்
நிலைத்திருத்தல் (மாற்கு 4 : 1 – 9)
திருமறை
கடவுளின் வார்த்தைகளால் நிறையப்பெற்றுள்ளன. இவைகள் போதிப்பதற்கும், கற்பிப்பதற்கும்,
நீதி வழியில் நடத்துவதற்கும் எமக்கு
தூய ஆவியினால் தரப்பட்டவைகள் ஆகும். (2 திமோத்தேயு 3;: 16 – 18, 1 பேதுரு 1: 21). மனிதன் எப்படி நடக்க
வேண்டும் எனவும், யாருடன் கூட்டுறவு
கொள்ள வேண்டும் எனவும் எமக்கு எடுத்துக்
காண்பிக்கின்றது. (திருப்பாடல் 1:1, 109, 105). இதன் ஒளியிலேயே ஆண்டவர்
இயேசு ஒர் உவமையை இங்கு
கூறுகின்றார்.
பாலஸ்தீனா
தேசத்தில் பொதுவாக விதைகள் விதைக்கப்பட்ட
பின்னரே நிலம் உழப்படுகின்றது. இத்தகைய
சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு இயற்கையிலிருந்து
விதைக்கின்றவன் உவமையை எடுத்து விண்ணகத்துக்குரிய
உண்மையை போதகிக்கின்றார். அதாவது தெரிந்ததிலிந்து தெரியாததை
நோக்கி நகர்கின்றார். எனவே தான் வில்லியம்
ரெம்பல் அவர்கள் மனித வாழ்வின்
ஒவ்வொரு அனுபவங்களின் மத்தியிலும் நாம் கடவுளை பிறரக்கு
காண்பிக்க வேண்டும் என்ற உண்மையை முன்வைக்கின்றார்.
இதனூடாக கடவுளுடைய வார்த்தைகக்கும் இயற்கைக்கும் இடையே உள்ள தொடர்பு
நிரூபிக்கப்படுகின்றது.
கடவுளுடைய
அரசின் வளர்ச்சிக்காக நாம் பாடுபடும் போது
பல சந்தர்ப்பங்களில் நாம் எதிர்பார்த்த அளவிற்கு
வெற்றி கிடைக்காமல் போகலாம். ஆனால், ஓரளவேனும் பணியின்
வெற்றியை காணலாம். எனவே தோல்வியடைந்த செயற்பாடகளையோ,
துறைகளையோ நாம் கவனத்தில் கொள்ளாமல்
வெற்றியடைந்தவைகளைக் குறித்து சிந்தித்தல் வேண்டப்படுவதாகும். அதாவது பாதையோரங்களையோ, கற்பாரைகளையோ,
முற்புதர்களையோ குறித்து சிந்திக்காமல் பலனளித்த நிலங்களைக் குறித்தும் சிந்தித்தல் வேண்டும். இத்தகைய சிந்தனை தொடர்த்தேச்சியாக
பணியாற்றுவதற்கு வேண்டிய பலத்தை தருகின்றது.
ஆதித்திருச்சபையி;ல் நற்செய்தியை ஏற்றுக்கொண்டோரில்
பெரும்பான்மையானோர் துன்புறுத்தல் காலப்பகுதிகளில் நற்செய்தியை விட்டு விலகி இயேசுவை
மறுதலித்தனர். இறைவனின் வார்த்தையை விட்டு விலகுவதற்கு அவர்கள்
அனுபவித்த துன்பம் பிரதான காரணமாக
காணப்பட்டது. இதனையே முற்புதர்களில் விழுந்த
வதைகள் தொவிக்கின்றன. எமது நாளாந்த வாழ்வில்
துன்புறும் அனுபவம் எமக்கு நேரிட்டாலும்
ஆண்டவரின் வார்த்தையை விட்டு விலகாது வாழ்வது
மிக அவசியமாகின்றது.
விதையிலேயோ,
விதைப்பவனிலோ எத்தகைய தவறுகளும் காணப்படுவதில்லை.
மாறாக விழுகின்ற நிலத்திலேயே அதன் பலன் தங்கியுள்ளது.
இதே வகையில் திருமறையிலோ, அதை
அறிவிப்பவரிலோ தவறு காணப்படுவதில்லை. மாறாக
அதை ஏற்றுக்கொள்வதன் ஊடாகவே பலன் தீர்மானிக்கப்படுகின்றது.
இதன்படி வார்த்தையை கேட்பது மாத்திரமல்ல மாறாக
அதன்படி நடப்பதே தேவையானதாக காணப்படுகின்றது.
மேலும் 9ம் வசனத்தில் கண்ணிருந்தும்
காணாமலும், காதிருந்தும் கேளாமலும், இதயத்தில் உணர்வில்லாமலும் வாழும் மனிதர்களின் நிலையைப்பற்றி
இப்பகுதி பேசுகின்றது. இதனொளியில் வார்த்தையை வாசித்தும் அதன் உண்மைகளை சரியான
முறையில் புரிந்து கொள்ளாமல் தமக்கேற்றப்படி விளக்கமலிக்கும் மானுடரைப் பற்றி இங்கு பார்க்கலாம்.
அதாவது உண்iமைகளிலிருந்து விலகிச்
செல்லும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக கற்பாறை நிலம் ஒப்பிடப்படுகின்றது.
வார்த்தை விடுதலை தன்மை வாய்ந்தது.
அவ்விடுதலையை அனுபவிக்க வேண்டுமாயின் அது விதைக்கப்பட வேண்டும்.
அப்பொழுதே அது பலனளிக்கும்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக