அமைதி அருளும் ஆண்டவர் (மாற்கு 4:35 – 41)
ஆண்டவர்
இயேசுவின் புதுமைகளைப் பொதுவாக 3 ஆக வகுப்பர். நோய்களைக்
குணமாக்குதல், பேய்களை ஓட்டுதல், இயற்கைக்கு
மேலான அதிகாரம் எனப் பாகுபடுத்துவர். இயற்கைக்கு
மேலான அதிகாரத்தக்குள் காற்றையும் கடலையும் அமைதிப்படுத்தும் புதுமை அடங்குகின்றது. இதன்
ஊடாக ஆண்டவர் இயேசு துக்கத்தில்
உள்ள மனிதருக்கும் வாழ்வைக் குறித்த நிச்சயமற்ற மனிதருக்கும்,
எதிர்காலத்தைக் குறித்த நம்பிக்கையற்ற மனிதருக்கும்
அமைதியை அருளுகின்றார். காற்றையும், கடலையும் அமைதிபடுத்திய நிகழ்வில் ஆண்டவர் இயேசு தனக்குள்
இருக்கும் கடவுள் இதை எல்லாம்
நடப்பிக்கின்றார் என கடவுளுக்குரிய மகிமையை
அவருக்கே கொடுக்கின்றார் (சங் - திருப் 89: 9, 107: 29). மேலும் காற்று
அதிகரித்து துன்பம் எற்படும்போது ஆண்டவர்
இயேசு தங்களுடன் இல்லை என்று பயந்தனர்.
கிறிஸ்தவ வாழ்வில் பணம் அதிகளவு தேவையற்ற
தாக்கங்களை எங்கள் வாழ்வில் கொண்டு
வருகின்றன. எனினும் கடவுளை நாங்கள்
நம்பும்போது இப்பேர்ப்பட்ட பயங்கள் எங்களைவிட்டு அகன்றுபோகின்றன.
(ஏசாயா 26:3, உபாகமம் 33: 27, லூக்கா 12: 7 -12). மேலும் மரண இருள்
போன்று துன்பங்கள் நேரிடும்போது பயப்படவேண்டிஎய அவசியம் இல்லை என்பதை
இப்பகுதி காண்பிக்கின்றது ( சங்கீதம் 23: 4).
இச்சம்பவம்
ஆதித்திருச்சபையின் துன்புறுத்தல் காலப்பகுதியை எமக்கு ஞாகப்படுத்துகின்றது. குறிப்பாக ஆதித்திருச்சபை
உரோமக் கலாபனைக்கு உட்பட்டிருந்தபோது ஆண்டவர் இயேசு தங்களின்
துன்புறும் அனுபவத்தின் மத்தியில் எங்கே உள்ளார் என்ற
கேள்வியை அடிக்கடி கேட்டனர். எனவே ஆசிரியர் உரோமாபுரியாகிய
அரசியல் கடலில் திருச்சபை என்னும்
படகு துன்பத்தினால் தத்தளிக்கின்றது. எனினும் ஆண்டவர் இயேசு
இப்புயலை அடக்குவார் என நம்பினர். எனவே
இச்சம்பவம் ஓர் விசுவாசத்தின் வெளிப்பாடாகக்
காணப்படுகின்றது.
கடவுள்
தமது படைப்பு நிகழ்வின்போது இயங்கையை
ஆண்டுகொள்ளுமாறு மனிதருக்குக் கட்டளை இட்டார். எனினும்
நம் ஆதிப்பெற்றோர் இயற்கையைக் கட்டுப்படுவதற்குப் பதிலாக சர்ப்பமாகிய இயற்கைக்கு
கட்டுப்பட்டது. இதன் காரணமாகவே இயற்கை
மனிதனை ஆதிக்கம் செய்ய முற்பட்டதன் விளைவாக
இயற்கை அனர்த்தங்கள் பூமியில் ஏற்பட்டன. பாவத்தினால் ஏற்பட்ட இவ்விளைவை ஆண்டவர்
இயேசு இயற்கையை கட்டுப்படுத்தியதன் ஊடாக முறியடித்தார்.
இலத்தீன்
அமேரிக்க இறையியலாளர்கள் ஆண்டவர் இயேசு கடலில்
ஏற்பட்ட புயலைவிட சீடர்களின் மனதில் ஏற்பட்ட புயலை
அடக்கியதே மேலானது என்கிறார். ஏனெனில்
அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என
இயேசு கூறிய போது சீடர்கள்
மிகவும் குழப்பமடைந்தார்கள். ஏனெனில் அக்கரையில் புற
இனமக்கள் அதிகம் வாழ்ந்தனர். அவர்களுடன்
உறவுகொள்ள சீடர்கள் விரும்பவில்லை. எனவே அவர்கள் மனதில்
பெருங்குழப்பம் ஏற்பட்டது.
இக்குழப்பத்தை
அடக்கி மற்ற மக்களையும் கடவுளின்
படைப்புக்களாக ஏற்றுக் கொள்ளுங்கள் என்ற
பரந்துபட்ட மனப்பான்மையை சீடர்கள் ஏற்றுக்கொள்ள முற்பட்டபோது அவர்கள் மனதில் ஆறுதல்
ஏற்பட்டது. எனவே இப்புதுமை அரும்பெரும்
உண்மைகளை இன்றும் தருகின்றது.
By Rev. Arulampalm Stephen
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக