தூதுப்பணியின் மாதிரி (மாற்கு 6: 1 – 3)
இப்பகுதி இயேசுவின் தூதுப்பணி பற்றிய பல மாதிரிகளை எமக்குக் காண்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு உலகில் குணமாக்கல் பணி, சமாதானப் பணி, போதிக்கும் பணி போன்றவைகளுக்காக தமது சீடர்களை அனுப்புகின்றார். (மாற்கு 6: 7). அனுப்புதல் கடவுளுக்குரிய பணியாகக் காணப்பட்டது. (ஏசாயா 6 :8) இப்பணியில் ஆண்டவர் இயேசுவும் இப்பொழுது இணைந்து கொள்ளுகின்றார். (யோவான் 20 :21). இதனூடாகத் தூதுப்பணி என்பது கடவுளுடைய பணி ஆகும். கடவுளே எம் ஒவ்வொருவரையும் அனுப்புகின்றார். நாங்கள் செய்யும் பணி கடவுளுடைய பணி என்ற எண்ணத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கடவுள் தம் பணியில் யாரையாவது எம்முறையிலாவது பயன்படுத்திக் கொள்ளுவார். இதனை நாசரேத்தூர் மக்கள் கண்டு கொள்ளவிரும்பவில்லை. ஏனெனில் ஆண்டவர் இயேசு அவர்களில் ஒருவராக அவரைப் போல காணப்பட்டபடியால் அவருடைய போதனையை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. (மாற்கு 6 : 3). மேலும், நாகமான் கடவுளுடைய செயற்பாடு எலிசா தன்னைத் தொட்டு குணமாக்குவதன் ஊடாகவே வெளிப்படும் என எண்ணி இருந்தார். ஆனால் இறைவாக்கினரோ நாகமானை நோக்கி யோர்தான் நதியில் மூழ்குமாறு வேண்டிக்கொண்ட போது கடவுள் இப்படியும் செயற்படக் கூடும் என ஏற்றுக்கொள்ள ஆயத்தமற்றவனாக இருந்தான். ( 2 அரசர் 5 : 1 – 19). எனவே யார் வாயின் ஊடாகவும் எம்முறையின் ஊடாகவும் கடவுளுடைய செயல் நடைபெறும் என நாம் முயற்சிக்க வேண்டும்.
ஆண்டவர் இயேசு பணியாளர்களை நோக்கி பணிக்காக எதனையும் எடுத்துக் கொண்டு போக வேண்டாம் எனக் கூறுகின்றார். (மாற்கு 6 : 8). இதன் மூலம் கடவுளில் பூரணமாக தங்கி இருக்க வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது. மேலும் நாம் பணிக்கு செல்லும்போது ஆண்டவர் இயேசு எமக்காக எதை ஆயத்தப்படுத்தி வைத்திருக்கின்றாரோ இல்லையேல் எதைச் சொல்ல வேண்டும் என்று விரும்புகின்றாரோ அதையே செய்ய அழைக்கப்படுகின்றறோம். மாறாக எம்மிடத்தில் எது உள்ளது அதைத் திணிக்க முயற்சிக்கக்கூடாது. (மத்தேயு 10 : 40, யோவான் 20;:21). திருப்பணியில் ஒரு சில சந்தர்ப்பங்களில் சோர்வு ஏற்படக்கூடிய அனபவங்கள் எமக்கு நேரிடலாம். எனவே அவ் அனுபவங்களில் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தும்படி ஊழியத்தில் கூட்டு அனுபவப் பகிர்வு முக்கியமானதாக வேண்டப்படுகின்றது. (தி. பணி 13 : 2, 16 : 25). எமது ஊழியங்களிலும் தனி அரசை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்காமல் பணியில் உடன் உழைப்பாளர்களை பங்காளர்களை பாவிக்க அழைக்கப்படுகின்றோம்.
பணியில் வார்த்தை பணியும் குணமாக்கும் பணியும் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டிருப்பதை தைலம் பூசி செபிக்கும் நிலை காண்பிக்கின்றது. (யாக்கோபு 5 :15). இத்திருப்பணி ஆதித் திருச்சபையின் பணி;ச்சூழலை எடுத்தக் காட்டுகின்றது. பணிகளி;ல் நிலவுகின்ற ஒற்றுமைத்தன்மையையும் வேறுபட்டதன்மையையும் எடுத்துக்காட்டுகின்றது. இத்தகைய பணி மாதிரியை நாசரேத் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்தபோது ஆண்டவர் இயேசு அப்பிரதேசத்தில் சமாதானப்பணியையோ குணமாக்கல் பணியையோ ஆற்றவில்லை. மேலும் அவருடைய சீடர்களை நோக்கி உங்கள் பணிகளை மக்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் பாதரட்சையில் படிந்துள்ள தூசியை உதறுங்கள் என்பது சாபக் கேட்டை குறிப்பதற்குப் பதிலாக நற்செய்தியை ஏற்றுக்கொள்பவரையும் நற்செய்தியை நிராகரிப்பவரையும் வேறுபடுத்தி அடையாளம் காட்டும் நிகழ்வாகக் காணப்படுகின்றது. எனவே இயேசுவின் பணி மாதிரி இன்றைய பணியாளர்களுக்கு சிறந்த ஓர் எடுத்துக்காட்டாகக் காணப்படுகின்றது.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக