மாய்மாலம் என்பது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது அல்லது செயற்படுவதைக் குறிக்கும். இங்கு மறைநூல் வல்லுனர்களை ஆண்டவர் இயேசு இப்பேர்ப்பட்ட மக்கள் என வலியுறுத்துகின்றார். ஏனெனில் இவர்கள் கடவுளையும், மதத்தையும் தங்கள் சொந்தப் பெயர் புகழுக்காகவோ இல்லையேல் இலாபத்திற்காகவோ பயன்படுத்துகின்றனர். இவர்களிடையே காணப்டும் தீயசெயல்கள் ஏனையவர்களிடத்தில் காவுகொள்ளாதபடி நாம் எச்சரிக்ககையாக இருக்க வேண்டும்.
இப்பேர்ப்பட்ட மக்கள் சமூகத்தில் பின்வரும் வழிகளில் தங்கள் இருப்பிடங்களை தக்க வைத்துக் கொள்வார்கள் என இயேசு கூறுகின்றார். குறிப்பாக நீண்ட அங்கிகளை அணிந்து சமுதாயத்தில தங்கள் மதிப்பைப் பெற முயற்படுவர். மேலும் மதிப்புள்ள இடங்களில் தங்கள் ஆசனங்களை பெற்றுக் கொள்ளவும் முற்படுவர் (லூக்கா 14 : 7 – 11). மேலும் நீண்ட மன்றாடல்களை ஆற்றிக் கொள்வதன் ஊடாகத் தங்களைத் தூய்மையானவர்கள் என பறைசாற்றுவர் (மத்தேயு 6 : 5- 8). இவைகள் அனைத்தும் கடவுளையும் சக மனிதனையும் ஏமாற்றும் செயல்கள் ஆகும். இவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குள்ள நிலை, மதிப்பு, பெறுமதி போன்றவைகள் அற்றுப்போய்விடுமோ என்கின்ற அச்சத்தினால் இப்பேர்ப்பட்ட செயல்களைச் செய்கின்றார்கள். எனினும் நாங்கள் ஒவ்வொருவரும் கடவுளுடைய பார்வையில் பெறுமதிமிக்கவர்கள் என்கின்ற உண்மையை இவர்கள் மறந்துவிடுகின்றார்கள் (லூக்கா 12 : 6,7).
இங்கு ஏழைப் பெண்மணியின் காணிக்கையைப் பற்றி ஆண்டவர் இயேசு பேசுகின்றார். ஏனெனில் இப்பெண்ணின் கொடை ஆதித் திருச்சபையின் வாழ்க்கைச் சூழலில் அடிக்கடி நினைவுபடுத்தப்பட்டிருக்கும் ஓர் செயலாகும். இப்பெண்மணி தனக்கு உண்டான எல்லாவற்றையும் எந்த வற்புறுத்தலும் இன்றி அவை அனைத்தும் கடவுளுடையது என்ற சிந்தனையுடன் தனது கொடையை கடவளுக்கு ஒப்படைத்தார் (திருப்பாடல்கள் ஃ சங்கீதம் 24 : 1 ). மேலும் இக்கொடை இரகசியமானதாகவும் பிரபல்லியத்தை எதிர்நோக்காததாகவும் வழங்கப்பட்டது (மத்தேயு 6: 1 – 6 ). மேலும் இந்தப் பெண்மணியிடம் வேறு எந்தப் பணமும் மிகுதியாகக் காணப்படாதபோதிலும் தனது எதிர்காலத் தேவையைக் குறித்து சிறிதும் கருதாமல் அனைத்தையும் காணிக்கைப் பெட்டிக்குள் போட்ட நிகழ்வு சிந்திக்க வைக்கும் ஓர் நிகழ்வாகும். ஏனெனில் எமது காணிக்கைகளில் செலுத்திய தொகையை விட செலுத்தாத தொகையைக் குறித்தே நாம் சிந்;திக்க வேண்டும். மேலும் இப்பெண்மணி இத்தகைய புரட்சிகரமான செயற்பாட்டில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவெனில் அவள் கடவுளை முழுமையாக நம்பி அவரே தனது வாழ்வில் அனைத்தையும் செய்து முடிப்பார் என உறுதிபூண்ட விசுவாசத்தின் வெளிப்பாடே இச் செயற்பாடு ஆகும். மேற்கூறிய இரண்டு நிகழ்வுகளிலும் அல்லது இரண்டு செயற்பாடுகளிலும் ஆண்டவர் இயேசு உண்மைத்தன்மையை எதிர்ப்பார்க்கின்றார். மறைநூல் அறிஞரிடத்தில் காணப்பட்ட, ஏழைப் பெண்மணியிடம் காணப்பட்ட அறவாழ்வும் உண்மையும் பாராட்டப்படுகின்றது. அனைத்தையும் சரிவர அறிந்திருந்த அறிஞர்களைவிட சிறய விசுவாசத்தைக் கொண்ட பெண்ணின் செயல் பெருமையுடன் நினைவுகூறப்படுகின்றது. இதனாலேயே வாழ்க்கையிலும் வழிபாட்டிலும் மாய்மாலமற்ற தன்மையை ஆண்டவர் இயேசு எதிர்பார்க்கின்றார்.
By Rev. Arulampalm Stephen
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக