சீடர்களை அழைத்தல்

சீடர்களை அழைத்தல் (மாற்கு 1:16-20)

ஆண்டவர் இயேசு தமது சீடர்களை அழைத்த வரலாற்றை 4 நற்செய்திகளும் கூறுகின்றது. குறிப்பாக இயேசுவின் சீடர்கள் கற்றறியவில்லை. சமூகத்தில் பாவிகள் என கருதப்பட்ட இவர்களை கடவுள் பயன்படுத்துகின்றால். ஒருவர் எத்தகைய நிலையில் இருந்தாலும் கடவுளால் பயன்படுத்த இடமளிப்பாரேயாகில் அவரின் இயலாமையிலும் கடவுள் செயற்பட வல்லவாராய் இருக்கின்றார். ஏனெனில் நாம் அல்ல கடவுளே எம்மை தெரிந்துக் கொண்டார். (யோவான் 15:16) ஏனெனில் கடவுளே எம்மில் அன்பு கூர்ந்தார். (1 யோவான் 4:19) கடவுளின் அழைப்பு ஏதோ ஒரு சமூகத்திற்கோ வர்க்கத்திற்கோ உரியது அல்ல. எனவே தான் ஆமோஸ் ஆட்டுமந்தை மேய்ப்பவனாகிய என்னையும் கடவுள் அழைத்தாரென பெருமிதம் கொள்கிறார். ( ஆமோஸ் 7:14) இயேசுவின் சீடர்களின் அழைப்பில் எல்லா வரையறைகளையும் தாண்டிய புதுமை மிக்க அழைப்பாக இதனைக் காணலாம்.

சீடர்களை அழைத்தல்

யூத ரபிமார்களுக்கு சீடர்கள் இருந்ததைப்போன்று இயேசுவும் சீடர்களை தெரிந்தெடுத்தார். எனினும் ஆண்டவர் இயேசு நீதிசட்டத்தையோ நபரையோ நூலையோ பின்பற்றுமாறு அழைக்கவில்லை. மாறாக தம்மை பின்பற்றுமாறு அழைத்தது அவரின் தனித்துவத்தை காண்பிக்கின்றது.  ஏனெனில் அவரே எமது வழிக்காட்டி ஆவார். (எபி 12:20) இயேசுவால் அவர்கள் அழைக்கப்பட்ட போது இயேசு அழைக்கின்றார் என்பதற்காக அல்ல மாறாக அவரே எல்லாவற்றிற்கும் காரணர் என்பதை நினைத்தே சீடர்கள் அவர் பின்னே சென்றார்கள். மேலும் அழைப்பு அவர்களுடைய நாளாந்த அனுப வாழ்வில் இருந்து வருகின்றது. இவர்கள் கற்றறிந்த அணுகுமுறைகளை பின்பற்றியே பணியாற்றுமாறு அழைக்கப்பட்டனர். அவர்களிடம் காணப்பட்ட தகமைகள் பணிக்கான உரங்களாக காணப்பட்டன. (2 கொரி 12;16, மத் 10:16)

ஆண்டவர் இயேசு சீடர்களை அழைக்கும்போது அவர்கள் கட்டடம் கட்டுவதற்காகவோ நிகழ்ச்சி திட்டங்களை நடாத்துவதற்காகவோ அழைக்கவில்லை.  மாறாக மனிதர்களை கடடுமாறு அழைக்கின்றார். எமது திருப்பணியில் இச்செயற்பாடு முக்கியமானதாகும்.  மேலும் யோவான் நற்செய்தியின்படி பேதுருவும் அந்திரேயாவும் இயேசுவின் திருமுழுக்கின் போது அவரை சந்தித்த போதிலும் உடனடியாக ஆண்டவர் இயேசு அவர்களை பணிக்கு அழைக்கவில்லை. அழைப்பிற்கான ஓர் குறிப்பிட்ட காலத்தை அவர்களுக்கு கொடுத்திருந்தார். ( யோவான் 1:35)

மாற்கு நற்செய்தியின்படி யாக்கோபுவும் யோவானும் தங்கள் கூலியாட்களையும் கைவிட்டு பின் தொடர்ந்தார்கள் என கூறப்படுகின்றது. இதன் மூலம் இவர்கள் பேதுரு அந்திரேயாவை போன்றன்று செல்வந்தர்கள் என்ற உண்மை புலனாகின்றது. அழைப்பில் நாம் பற்றிக்கொள்ள வேண்டியதையும் கைவிட்டு செல்ல வேண்டியதையும் இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.

ஆண்டவர் இயேசுவின் அழைப்பை கேட்டப்போது அவர் வழமைக்கு மாறானவர் என்ற காரணத்திற்காகவோ இல்லையேல் உரோமருக்கு எதிராக புரட்சி புரிந்து ஆட்சியை கைப்பற்றி கையளிப்பார் என்கின்ற தவறான நோக்கத்திற்காகவோ அவரை பின்பற்றி இருக்கலாம் (அப் 1:6). இன்னும் பிழையான நோக்கத்திற்காக இயேசுவை  பின்பற்றுவோர் காணப்படுகின்றனர்.  எனவே அழைப்பு சலுகை அல்ல. பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும்.

By Rev. Arulampalm Stephen

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக